×

மின் ஊழியர் சங்கத்தின் சார்பில் விருதுநகரில் மனு கொடுக்கும் போராட்டம்

விருதுநகர், ஜூலை 5: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் செந்திரபாண்டியன் தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் மின்வாரிய தொழிற்சங்களுடன் 22.2.2018ல் போடப்பட்ட ஒப்பந்தப்படி 6.1.1998 முதல் இன்று வரை பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.

காலியாக உள்ள பணியிடங்களில் ஒப்பந்த ஊழியர்களை தினக்கூலி அடிப்படையில் நியமனம் செய்து நிரந்தரப்படுத்த வேண்டும். ஒப்பந்த முறையை கைவிட்டு ஒப்பந்த பணியாளர்களுக்கு தினக்கூலி வழங்க வலியுறுத்தி கோஷம் எழுப்பி மனு அளித்தனர். மனு கொடுக்கும் போராட்டத்தில் மாநில துணைத்தலைவர் சந்திரன், சிஐடியு மாவட்ட செயலாளர் தேவா, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post மின் ஊழியர் சங்கத்தின் சார்பில் விருதுநகரில் மனு கொடுக்கும் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Virudhu Nagar ,Electrical Employees Union ,Virudhunagar ,Central Tamil Nadu Electrical Employees Central Organization ,President ,Chendrapandian ,
× RELATED அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை...